சென்னை: பெண் பிசியோதெரபிஸ்டிடிடம் செக்ஸ் சில்மிஷம்-16 வயது சிறுவன் கைது
சென்னை: இளம் சிறார்கள் மனதிலும் செக்ஸ் வக்கிரம் எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில், 37 வயதான பிசியோதெரபிஸ்ட் பெண்ணிடம், 16 வயதேயான சிறுவன் ஒருவன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் நிரூபித்துள்ளது.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மோனிகா. 37 வயதான இவர் பிசியோதெரபிஸ்ட் ஆக உள்ளார். நேற்று இரவு அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். மிகவும் இறுக்கமான உடை அணிந்திருந்தார்.
இந்த நிலையில் திடீரேன ஒரு சிறுவன் வேகமாக சைக்கிளில் வந்தான். மோனிகா முன்பு சைக்கிளை நிறுத்தி அவரை தடுத்து நிறுத்தினான். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்வது போல மோனிகாவிடம் ஈடுபட ஆரம்பித்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மோனிகா உதவி கோரி கூச்சலிட்டார்.
அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப் பார்த்த சிறுவன் தப்பி ஓட முயன்றான். ஆனால் மக்கள் ஒன்று கூடி அவனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீஸாரிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான்.
விசாரணையில் அந்தப் பையனுக்கு 16 வயதுதான் ஆவது தெரிய வந்தது. 16 வயதேயான அந்த சிறுவன், 37 வயதான பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்ற செயல் அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications