தென்காசி இந்தியன் வங்கியில் ரூ.1.52 கோடி மோசடி-3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசியில் இந்தியன் வங்கியில் ரூ.1.52 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசியைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் தன் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து கோழி பண்ணை வைப்பதாகக் கூறி இந்தியன் வங்கியில் ரூ. 1.52 கோடி கடன் பெற்றார். வாங்கிய கடனையும் அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து வங்கியின் சார்பில் சிபிஐயில் புகார் தரப்பட்டது. புகாரின்பேரில் சிபிஐ விசாரித்தது. இந்த நிலையில் இந்த மோசடி வழக்கில் ஈஸ்வரின் மனைவி சந்திராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய ஷேக் மன்சூர், முஸ்தபா நாசர் ஆகியோரை நேற்று சிபிஐ கைது செய்தது. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications