நார்வே-துருக்கி விமானத்தை கடத்த முயற்சி!
Subscribe to Oneindia Tamil

விமானம் இஸ்தான்புல் நகரை அடைந்து கொண்டிருந்த நிலையில் குமா யாசர் என்ற 40 வயது பயணி திடீரென முகமூடியை அணிந்து கொண்டு விமானிகளின் காக்பிட் அறை அருகே வந்தார்.
தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை மீண்டும் நார்வே நாட்டுக்கே திருப்ப வேண்டும் என்றும் கூறி கூச்சலிட்டார். ஆனால், இரு பயணிகள் அவர் மீது பாய்ந்து அவரை முடக்கினர். மற்றவர்களும் சேர்ந்து அவரைத் தாக்கி ஒரு இருக்கையில் அமர வைத்துக் கட்டினர்.
அவரை சோதித்தபோது குண்டு ஏதும் இல்லை. இதையடுத்து இஸ்தான்புல் அடாடுர்க் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications