நெல்லை திமுக கவுன்சிலரை தாக்க முயற்சி: மமமுகவினர் 10 பேர் கைது
நெல்லை: நெல்லை மாநகராட்சி கவுன்சிலரை தாக்க முயன்ற மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கட்சியினர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
நெல்லை பேட்டையில் கழிவு நீரோடை சுத்தம் செய்வது தொடர்பாக நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் அப்துல் வகாப்பிற்கும், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தினருக்கும் சில நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் கவுன்சிலர் பேட்டையில் உள்ள ஒரு இல்ல நிகழ்ச்சிக்கு சென்றபோது மமமுகவினர் அவரை தாக்க முயன்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் மமமுகவை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.
அவர்களை விசாரணைக்காக தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதை அறிந்த மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பாளை ரபீக், மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமையி்ல் ஏராளமானோர் தச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு வந்த உதவி கமிஷனர் லயோலா இக்னோஷியஸ், இன்ஸ்பெக்டர் பற்குணம், பார்னாஸ் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மமமுகவினர் கலைந்து சென்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications