அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மதுரை: அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் மருத்துவ அலுவலர்கள் பணியிடங்கள் நேர்காணல் மற்றும் கலந்தாலோசனை செய்து உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
இது வரை முப்பத்தி நான்கு கலந்தாய்வுகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் மூலம் 6978 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தின் மலைப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் நீண்ட நாட்களாக காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை சிறப்பு நியமனம் மூலம் நிரப்பிட அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி மேற்படி பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை, எண்.359, அண்ணாசாலை, டி.எம்.எஸ். வளாகம், தேனாம் பேட்டை, சென்னை- 600 006.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 10.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications