வாகனங்களை சேதப்படுத்திய வழக்கு: ஓ.பி உள்ளிட்ட 20 அதிமுகவினருக்கு பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

O Panneer Selvam
மதுரை: மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது வாகனங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 20 அதிமுகவினருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2008ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் லதா அதியமானும், அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர்.

அப்போது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூடக்கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்எல்ஏ சாமி, அப்போதைய மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயராமன் உள்பட 67 பேர் அந்த வழியே வந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த கடந்த மாதம் 29ம் தேதி திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கதமிழ்செல்வன், ஜெயராமன் மற்றும் 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இதையடுத்து அவர்கள் 20 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+