வாகனங்களை சேதப்படுத்திய வழக்கு: ஓ.பி உள்ளிட்ட 20 அதிமுகவினருக்கு பிடிவாரண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2008ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் லதா அதியமானும், அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர்.
அப்போது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கூடக்கோவில் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், எம்எல்ஏ சாமி, அப்போதைய மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயராமன் உள்பட 67 பேர் அந்த வழியே வந்த வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த கடந்த மாதம் 29ம் தேதி திருமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், தங்கதமிழ்செல்வன், ஜெயராமன் மற்றும் 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து அவர்கள் 20 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications