ஈழ இனப் படுகொலை - 'என்ன செய்யலாம் இதற்காக' நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil
மதுரை : ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக? " நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகின்றது.
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு விழா வரும் 9-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்நூல் இலங்கை மண்ணில் ஈழத் தமிழர்கள் விலங்குகளை விட மோசமாக துன்புறுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டதை விவரிக்கிறது. இதில் ஈழப் படுகொலைகளை உலகிற்கு தெரிவிக்கும் வகையில் பல நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் உள்ளன.
இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் ஈழ ஆதரவாளர்கள், பிரபல அரசியல் கட்சி தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications