ஆளுநர் உரை-'யானைப் பசிக்கு சோளப் பொரி': விஜயகாந்த்
சென்னை: சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை அரைத்த மாவையே அரைப்பது போல உள்ளது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி அரசு பொறுப்பேற்ற ஐந்து ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 70 லட்சம். ஆக 5 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருப்பது என்பது யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொரியைப் போல உள்ளது.
இலங்கை தமிழர் படுகொலைக்கு முழு முதல் காரணமாக இருந்துவிட்டு, இன்றைக்கு அவர்களின் வாழ்வுக்காகவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக பாடுபடுவதாகவும் கருணாநிதி அரசு கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
தங்கபாலு பாராட்டு:
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக காங்கிரஸ் சிறப்பாக தனது கடமையை சட்டசபையில் ஆற்றியிருக்கிறது. இதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பணியை தொடர்ந்து ஆற்றுவார்கள்.
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து உரிய நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் முடிவு எடுத்து அறிவிப்பார்.
கவர்னர் உரையில் பல நல்ல திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் திட்டங்களும், மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய அரசு இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பல திட்டங்களை ரூ.8,000 கோடி அளவுக்கு இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு சமமான வாழ்வாதாரம் கிடைக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ரத்து செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். முதல்வர் உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுப்பார். காங்கிரசார் தமிழக அரசிடமிருந்து அவசியமின்றி எந்த சலுகையும் பெற மாட்டார்கள் என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications