காமன்வெல்த் போட்டிக்கான பொருட்கள் வாங்கியதில் பணம் விரையம்-விளக்கம் கேட்கிறது சிஏஜி
டெல்லி: காமன்வெல்த் போட்டிக்குத் தேவையான பொருட்களை வாங்கியது தொடர்பான ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் கண்டுபிடித்து இதுதொடர்பாக போட்டிக் குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவுக்கு சிஏஜி அலுவலகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில் பொருட்களுக்கான மார்க்கெட் விலையை விட மிகப் பெரிய அளவு அதிக விலை கொடுத்தது ஏன் என்று கேட்டுள்ளது.
மேலும், சில பொருட்கள் மிக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் சில விற்பனையாளர்களுக்குச் சாதகமாக ஒருங்கிணைப்புக் குழு நடந்திருப்பதாகவும் சிஏஜி அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்த காமன்வெல்த் போட்டியால் நாட்டுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி செலவானது நினைவிருக்கலாம். ஆனால் அதை விட மூர்ச்சைய ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பது அந்தப் போட்டியை முன்வைத்து நடந்த மிகப் பெரிய அளவிலான ஊழல்கள்தான். அதை தற்போது சிஏஜி ஆய்வு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications