மும்பையில் லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி: 6 பேர் கைது
மும்பை: மும்பையில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கும் ரஸ்தோம்ஜீ டவர்ஸில் அமைக்கப்பட்டிருந்த லிப்ட் அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்று தீயணைப்பு துறை தலைமை அதிகாரி யு.கே. டட்கரே தெரிவித்தார்.
லிப்ட் விழுந்தவுடனே அங்கிருந்த பொதுமக்களும், போலீசாரும் காயமடைந்தவர்களை அருகில் இருந்த சயன் மருத்துவமனையில் சேர்த்துவிட்ட பிறகு தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததாக டட்கரே மேலும் தெரிவித்தார்.
மத்திய மும்பையில் உள்ள ரூயா கல்லூரிக்கு எதிரில் 25 மாடி கட்டிடமான ரஸ்தோம்ஜீ டவர்ஸ் கட்டப்பட்டு வருகிறது. அதில் கட்டுமானப்பணிக்காக அமைக்கப்பட்ட லிப்டில் 6 தொழிலாளர்கள் ஏறினர். திடீர் என்று அது கீழே விழுந்தது என்று போலீசார் கூறினார்கள்.
இந்த வழக்கில் கட்டிடத்தின் பில்டர், கான்ட்ராக்டர் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications