முன்னாள் ராஜ்யசபா திமுக எம்.பி. எம்.ஏ. காதர் மரணம்
ராமநாதபுரம் : முன்னாள் திமுக ராஜ்யசபா உறுப்பினர் எம்.ஏ. காதர், ராமநாதபுரத்தில் மரணமடைந்தார்.
மண்டபத்தைச் சேர்ந்த காதர், ராமநாதபுரம் நகரசபையின் தலைவராகவும், மண்டபம் பேரூராட்சி தலைவராக பல ஆண்டுகளும் தி.மு.க. கட்சியில் மாவட்ட பொருளாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துவந்துள்ளார்.
1997-ம் வருடம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தி.மு.க.வின் மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடலை ராமநாதபுரத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் சுப. தங்கவேலன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
காதருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உண்டு. இதில் மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.












Click it and Unblock the Notifications