சுடுகாட்டு புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை கண்டெடுப்பு
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனியில், சுடுகாட்டுப் புதரில் பிறந்து 6 நாளே ஆன ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தையை வீசி விட்டுச் சென்ற தாயைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று சுடுகாட்டுப் பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை அழும் ச்த்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் வந்த வழி சென்றுள்ளனர்.
அப்போது ஒரு புதரில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸிற்கு போன் செய்து அந்த குழந்தையை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அனாதையாக விடப்பட்டுள்ள அந்த குழந்தை அதே தேனி அரசு மருத்துமனையில் கடந்த 3-ம் தேதி பிறந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். அதன் தாயைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications