கே.ஜி.பாலகிருஷ்ணன் மருமகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை: கேரள அரசு உத்தரவு
பத்தனம்திட்டா: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீநிஜனிடம் லஞ்ச ஒழி்ப்பு போலீசார் விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். தற்போது அவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளார். அவருடைய மருமகன்கள் ஸ்ரீநிஜன், பென்னி மற்றும் தம்பி கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவர்களில் பாஸ்கரன், தமிழகத்தில் பெருமளவில் சொத்துக்களை வாங்கிப் போட்டுள்ளார் என்று குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து கேரள அரசின் சிறப்பு வழக்கறிஞர் பதவியை பாஸ்கரன் ராஜினமா செய்தார். மேலும், கேரள இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிஜன் விலகினார். இந்த நிலையில் ஸ்ரீநிஜனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி கொச்சியைச் சேர்ந்த ஷமீர் என்பவர் கேரள முதல்வர் அச்சுனாதனந்தனிடம் மனு கொடுத்தார்.
அதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு அச்சுதானந்தன் உத்தரவிட்டார். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த கொடியேறி பாலகிருஷ்ணன், ஸ்ரீநிஜனிடம் விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications