24ல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப் பயணம்
தூத்துக்குடி : வரும் 24-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் இன எழுச்சி சுடர்ப்பயணம் நடைபெறுகிறது.
ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து உயிர் நீத்தார். முத்துக்குமார் நினைவாக வரும் 24-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இன எழுச்சி சுடர்ப்பயணம் நடைபெற உள்ளது.
இது குறித்த பயண விவரம் வருமாறு:
24.01.2011 தூத்துக்குடி, ராமேசுவரம், தருவிக்குளம், சாயல்குடி, முதுகுளத்தூர், போகலூர், ராமநாதபுரம், மண்டபம்.
25.01.2011 இராமேசுவரம், ஆலங்குடி , பனைக்குளம், தேவிப்பட்டினம், தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை.
26.01.2011 ஆலங்குடி, திருவாரூர், திருச்சிற்றம்பலம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், வடுவூர், மன்னார்குடி, நீடாமங்கலம்.
27.01.2011 திருவாரூர்,சிதம்பரம், நாகை, நாகூர், நன்னிலம், குடந்தை, மயிலாடுதுறை, சீர்காழி.
28.01.2011 சிதம்பரம், மாமல்லபுரம், கடலூர், புதுவை, கிழ்க்கு கடற்கரைச் சாலை வழி.
29.01.2011 மாமல்லபுரம், கொளத்தூர், முட்டுக்காடு, திருவான்மியூர், தரமணி, சைதாப்பேட்டை, உயர்நீதிமன்றம், இராஜாஜி சாலை, வன்னாரபேட்டை, பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், பேப்பர் மில் சாலையில் முடிவடைகின்றது.
இந்த பயணத்திற்கு தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, தமிழக மாணவர் இயக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி, இளந்தமிழர் இயக்கம், இளைஞர் இயக்கம், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம் போன்ற அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.












Click it and Unblock the Notifications