இலங்கையில் தமிழர்களுக்கு இன்றும் துயரம் தான்-ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வேதனை
கும்பகோணம்: இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பிறகு, அங்குள்ள தமிழர்களை பார்த்த போது, அவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தனர். இப்போதும் அதே நிலைமையில் தான் உள்ளனர் என்று வாழும் கலை பயிற்சி நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் குருஜி தெரிவித்துள்ளார்.
பெங்களூரிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்த வாழும் கலைபயிற்சி நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் குருஜி சுவாமிமலை கோவிலில் தரிசனம் செயதுவிட்டு, பாபநாசத்தில் உள்ள சிவாலயத்தில் நடந்து வரும் மகா ருத்ர யாகத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் கும்பகோணம் வந்த அவர் கூறியதாவது,
வாழும் கலை அமைப்பு துவங்கி 30-வது ஆண்டு நடந்து வருகிறது. இதை முன்னிட்டு பாபநாசம் 108 சிவாலயத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மும்பையில் ஐந்து நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
வரும் ஜனவரி 22, 23 ஆகிய தேதிகளில் இலங்கையில் 21 ஆயிரம் பேர் தேவாரம் பாடி, பௌத்த மத கோட்பாடுகளை கடை பிடிக்கும் நிகழ்ச்சியும், சென்னையில் 5,500 பேர் ஒரே மேடையில் பங்கேற்கும் நாத வைபவ நிகழ்ச்சியும் நடக்கிறது.
உலக அமைதிக்காக ஜெர்மனி நாடாளுமன்றத்தில் உள்ள ஹிட்லர் அரங்கில் அந்நாட்டு அரசின் ஒத்துழைப்போடு சொற்பொழிவு நடத்தப்படும்.
இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு பிறகு, அங்குள்ள தமிழர்களை பார்த்த போது, அவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தனர். இப்போதும் அதே நிலைமையில் தான் உள்ளனர்.
அவர்களை நான் மீண்டும் சந்தித்து ஆறுதல்படுத்தி, புத்துணர்ச்சி அளித்து, சுய நம்பிக்கை அளிக்க உள்ளேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications