5 மாதத்தில் திமுகவினர் இன்னல்களை சந்திப்பர்-விஜயகாந்த்
விழுப்புரம்: வரும் சட்டசபை தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி, முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது. அங்கு விஜய்காந்தின் மனைவி பிரேமலதா, அப் பகுதி பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில்
கோவையில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்திராவிற்கு மறுவாழ்வு கொடுப்போம் என்று பேசியதால் ஆட்சியை இழந்தவர் கருணாநிதி. அவருடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது வேதனைக்குரியது.
உழைக்காமலேயே சொத்துகளை குவித்து வைத்துள்ள திமுகவினர் இன்னும் 5 மாதம் கழித்து கடும் இன்னல்களை சந்திக்கவுள்ளனர்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் கருணாநிதியின் ஆட்சியில் வெங்காயம் என்ன விலை?. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பில்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?
நான் கட்சி ஆரம்பித்தப் பின் தான் கருணாநிதியின் மறுப் பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. சுய மரியாதை இயக்கத்திலிருந்து வந்த கருணாநிதி மஞ்சள் துண்டும், சிவப்புக் கல் பதித்த மோதிரமும் போட்டிருப்பது ஏன்?.
ஊருக்கெல்லாம் தமிழ் பெயர் வைக்கும் கருணாநிதி, தன் மகன் ஸ்டாலினுக்கு ஏன் பெயர் மாற்றம் செய்யவில்லை?.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம். படித்தவருக்கு மட்டுமின்றி படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். அன்னை மொழியைக் காப்போம். அனைத்து மொழியையும் கற்க வழி செய்வோம்.
வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் விரும்பினால் நான் விழுப்புரத்தில் போட்டியிடவும் தயார். தேர்தலில் தொண்டர்கள் நினைத்தால், அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி (விழுப்புரம் பொன்முடியும் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது) முதல்வர் கருணாநிதியையும் எதிர்த்து நின்றும் வெற்றிப் பெறுவேன்.
பன்றியோடு சேர்ந்த கன்று போல இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி நிலை உள்ளது என்றார் விஜய்காந்த்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications