விடுதலைப் புலிகளுக்கு நிதி-சுவிட்சர்லாந்தில் 10 தமிழர்கள் கைது
ஜெனீவா: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டியதாக 10 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெடரல் கிரிமினல் துறையினர் இது தொடர்பாக நாடு முழுவதும் 23 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல தமிழர்களின் வீடுகள், கடைகளும் அடங்கும்.
கிரெளவ்பண்டன், சூரிச், கெல்லன், லுஸ்ரென், சோலாதுர்ன், பெர்ன், ப்ரிபோர்க், வாட், ஜென்ப், பேசல் டவுன் ஆகிய இடங்களின் உள்ளூர் போலீசாருடன் இணைந்து இந்த சோதனைகள் நடந்தன.
இந்த சோதனைகளைத் தொடர்ந்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 8 பேர் இன்னும் தொடர்ந்து போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதியுதவி அளித்தோர் தாமாக முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பல ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்படவில்லை குறி்ப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் சுமார் 40,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications