பெட்ரோல் விலை உயர்வு, மன்மோகன், கருணாநிதி தந்த பொங்கல் பரிசு-பாஜக

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
ஒவ்வொரு முறை டீசல், பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஒவ்வொரு சாமான்ய வியாபாரிகளும், பொதுமக்களும் நேரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்திப்பது மட்டுமின்றி அதன் காரணமாக உருவாகும் மறைமுக பல்வேறு விலை உயர்வுகளையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
மத்திய, மாநில அரசுகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங்கும், முதல் அமைச்சர் கருணாநிதியும் தந்திருக்கும் பொங்கல் பரிசுதான் இந்த விலை உயர்வு.
ஒரு பக்கம் இலவச அறிவிப்பு. மறுபக்கம் விலை உயர்வுக்கு துணை போகின்ற மத்தியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வையும் தான் ஆட்சிக்கு வந்தது முதல் விலை உயர்வை மாத்திரம் வெளியிட்டு மக்களை சோதனைக்குள்ளாக்கி கொண்டிருக்கும் காங்கிரசும் அதனை வழி நடத்தும் சோனியாவையும், மன்மோகன்சிங்கையும் வன்மையாக பா.ஜ.க. கண்டிக்கிறது.
தற்போது அறிவித்துள்ள விலை உயர்வை கண்டித்தும் எதிர் காலத்தில் இனி ஒரு விலை உயர்வு அறிவிப்பை அறிவிக்க கூடாது என வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. போராட்டம் நடத்தும் என தெரிவித்துக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications