இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியதால் மக்கள் பீதியில் வெளியே ஓடி வந்தனர்.
சுனாமி ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியதால் கடல் பகுதிகளை விட்டு உயரமான இடங்களை நோக்கி ஓடினர். ஆனால் சுனாமி ஏற்படவில்லை.
இந்த நிலநடுக்கம் ரிக்சர் அளவுகோளில் 6.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
ஜகார்த்தாவில் இருந்து 500 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications