சபரிமலை- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை தர வேண்டும்-விஜயகாந்த் கோரிக்கை
மதுரை: சபரிமலையில் பலியான ஐயப்ப பக்தர்கள் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
சபரிமலையில் நடைபெற்ற மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் ஆவலுடன் மகர ஜோதியைக் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி திடுக்கிட வைத்துள்ளது.
விபத்து நடந்து பல உயிர்கள் போன பிறகு நீதி விசாரணை நடத்துவதும், காவல்துறை புலனாய்வு மேற்கொள்வதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதும் ஓரளவு ஆறுதல் அளிக்குமே தவிர இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுத் தராது.
பல குடும்பங்கள் இவற்றால் நிரந்தர துயரங்களுக்கும், வறுமைக்கும் ஆளாக வேண்டி வரும். எனவே, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது அரசு வேலை கொடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அறிந்து முன் கூட்டியே வழிகளை அதிகப்படுத்தியும், அகலப்படுத்தியும் முறையான வேலிகள் அமைத்தும் முறைப்படுத்தி இருக்கலாம்.
மேலும், கோயிலுக்குச் செல்வோரின் எண்ணிக்கையை அனுமதி சீட்டுகள் வழங்குவதன் மூலம் இத்தகைய தாறுமாறான நெரிசலை தவிர்த்து ஒழுங்காக, வரிசையாக பக்தர்களை அனுப்பியிருக்கலாம்.
திருப்பதி போன்ற திருத்தலங்களில் மக்கள் கடவுளை தரிசிக்கும் வகையில் முறைப்படுத்தி இருப்பது நினைவு கொள்ளத் தக்கது.
கேரள அரசும், கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் முன் கூட்டியே மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
இனி வரும் காலத்திலாவது ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications