12 லட்சம் கார்களை தயாரிக்க மாருதி சுசுகி இலக்கு
டெல்லி: நடப்பு நிதியாண்டில் 12 லட்சம் கார்களை தயாரிக்க மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டின் கார் உற்பத்தி நிறுவனங்களில் மாருதி சுசுகி இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில்,கார் உற்பத்தியை கணிசமாக உயர்த்தும் வகையில் இலக்கை கூட்டியுள்ளது மாருதி சுசுகி.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஓருவர் கூறியதாவது:
கடந்த 5 மாதங்களுக்கு முன், மாதத்திற்கு ஓரு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை மாருதி பெற்றது. இதையடுத்து, கார் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில்,12 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயி்க்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த நிதியாண்டைக் காட்டிலும், நடப்பு நிதியாண்டில் கார் உற்பத்தி 20சதவீதம் உயரும். மேலும், அரியானாவிலுள்ள ரோடக்கில், 1,000 கோடி முதலீட்டில், சோதனை ஓட்ட மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் அடுத்த மூன்றாண்டுகளில், தயாராகிவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications