ராஜபக்சே படம் பொறித்த ராணுவ காலண்டரை எரித்துப் போராட்டம்
உடுமலை: இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவின் படம் பொறித்த இந்திய பாதுகாப்புத்துறையின் காலண்டரை தீவைத்து எரித்து பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உடுமலை ராணுவப்பள்ளி ஈழத்தில் இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கையின் சர்வாதிகாரி ராஜபக்சேவின் படம் பொறித்த காலண்டர்களை வெளியிட்டு தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த காலண்டர்களை திரும்பப் பெறக் கோரி பெரியார் திராவிட கழகம் சார்பில் உடுமலையில் போராட்டம் நடந்தது. அதில் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் கலந்து கொண்டன.
அப்போது காலண்டர்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். அதை போலீஸார் தடுக்க முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications