ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி கிப்ட் செக் வழக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி பரிசு்ப் பொருள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 1992-ம் ஆண்டு அவர் பிறந்த நாளைக் கொண்டாடியபோது, அவருக்குப் பரிசாக ரூ. 2 கோடிக்கு கிப்ட் செக்குகள் வந்தன. இதை அரசுக் கருவூலத்தில் அவர் சேர்க்கவில்லை. மாறாக தனது வங்கிக் கணக்கில் சேர்த்தார்.

இதையடுத்து ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மூன்று பேருமே மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இது நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜரானார். ஜெயலலிதா தரப்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட இருப்பதால் மற்றொரு நாளுக்கு வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

மேலும், செங்கோட்டையன் தரப்பில் கூறுகையில், ஜெயலலிதா தரப்பு வாதம் முடிந்த பிறகே தங்கள் தரப்பில் வாதிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு சிபிஐ வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு கருத்தையும் கேட்ட பின்னர் ஜனவரி 31ம்தேதிக்கு வழக்கை நீதிபதி பழனிச்சாமி ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+