இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி என்னைத் தொட்டதே இல்லை: மொராக்கோ பெண் விளக்கம்

இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனி 17 வயது கிளப் டான்சரான கரிமா எல் மக்ரக் உடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மிலன் வழக்கறிஞர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணைக்கு கடந்த சில நாட்களில் பெர்லஸ்கோனி (74) இரண்டாவது முறையாக தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்து வீடியோ டேப் அனுப்பியுள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணும் தனக்கும் இத்தாலிய பிரதமருக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை என்று கூறி வருகிறார்.
தன்னை பெர்லஸ்கோனி தொட்டது கூட கிடையாது, தனக்கும், அவருக்கும் இடையே செக்ஸ் உறவும் நடக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
இதற்கிடையே, இந்த விசாரணை சட்டவிரோதமானது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுகிறது என்று பெர்லஸ்கோனியும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் தலைகுனியும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. நான் வழக்கு விசாரணையை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் பாரபட்சமில்லாத நீதிபதிகளை வைத்து விசாரிக்கட்டும், இந்த வழக்கறிஞர்களை வைத்து அல்ல. அவர்கள் இந்த வழக்கை அரசியல் சண்டைக்காக பயன்படுத்த நினைக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications