கருப்புப் பண விவகாரம்-அரசின் நிலையை தெளிவாக விளக்க பிரணாபுக்கு பிரதமர் உத்தரவு

உச்சநீதிமன்றம் கருப்புப் பண விவகாரம் தொடர்பான வழக்கில் அடுத்தடுத்து 2 முறை மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஜெர்மனியின் லிச்சன்ஸ்டைன் வங்கியில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள 26 பேரின் பெயர் விவரங்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு மறுத்து வருவதற்கு அது கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அந்த செயலை ஏன் அரசு மறைக்கப் பார்க்கிறது என்றும் அது காட்டமாக கேட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வர உடனடியான நடவடிக்கை, தீர்வு எதுவும் நம்மிடம் இல்லை. தற்போது கிடைத்துள்ள பட்டியலை வைத்து உரியவர்களிடம் வரி வசூலிக்க பயன்படுத்துவோம் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. அப்போது கருப்புப் பண விவகாரம் குறித்து பிரதமர் பேசினார். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசின் நிலையை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அவர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு பிரணாப் முகர்ஜியை பிரதமர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications