அண்டை மாநிலத்தவர் வாங்கியுள்ள நிலத்தில் பயிர் செய்யுங்கள்-ராமதாஸ் அழைப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவருமான பி.ஜே.ஏழுமலை-மதுமிதா ஆகியோரால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரூபிகா திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று விவசாயம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நஷ்டப்படுகின்றனர். ஆனால் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும் போது பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதனை பதுக்கி வைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பற்றாக்குறை, அதனைதொடர்ந்து ஏற்படும் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் அரசாங்கத்தை பார்த்து நாங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா எனக் கேட்கின்றனர். அந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி இரவு, பகல் பாராமல் உழைக்கின்றான். ஆன் லைன் வியாபாரம் செய்து பதுக்கல்காரன் பதுக்கிக்கொண்டே இருக்கிறான். அரசாங்கம் விளைபொருட்கள் அதிகம் விளையும் நேரத்தில் அதனை சேமிப்பு குடோன்களில் சேமித்து வைத்து பின் விலை உயர்வு ஏற்படும்போது அதாவது சீசன் இல்லாத சமயத்தில் அதிக விலைக்கு விற்று அதில் ஏற்படும் கூடுதல் வருவாயை விவசாயிக்கு தரவேண்டும்.
மார்க்கெட் கமிட்டியில் பெரும் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்து கின்றனர். அரசாங்கத்துக்கும் இந்த நிலை தெரியும். ஆனால் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
இதனால்தான் விவசாயிகள் தங்கள் விலைநிலங்களை விற்றுவருகின்றனர். அவ்வாறு வாங்கும் விளை நிலங்களிலும் விவசாயம் நடைபெறுவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாம் அரிசிக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கவேண்டிய அபாய நிலை ஏற்படும். நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்க்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன்.
சிறு, மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரு 25 ஆயிரம் சம்மந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் அரசாங்கம் பணம்போடவேண்டும். காரணம் அந்த விவசாயி இந்த சூழ்நிலையிலும் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவே இந்த தொகை ஆகும்.
விவசாயிகள் பாவப்பட்டவர்களாக உள்ளனர். விவசாயிகளுக்காக நாம்போராடும் இந்த நிலையை அனைவரும் உணரவேண்டும். அந்த நிலை வரும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும் என்றார் அவர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications