அண்டை மாநிலத்தவர் வாங்கியுள்ள நிலத்தில் பயிர் செய்யுங்கள்-ராமதாஸ் அழைப்பு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஒன்றியம் சு.பில்ராம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரும் பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவருமான பி.ஜே.ஏழுமலை-மதுமிதா ஆகியோரால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீரூபிகா திருமண மண்டப திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராமதாஸ். அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று விவசாயம் இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. விவசாயிகள் அதிகம் நஷ்டப்படுகின்றனர். ஆனால் அதனை வாங்கி விற்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். விவசாயிகள்தான் கஷ்டப்பட்டு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்து வரும் போது பண முதலைகள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்கி அதனை பதுக்கி வைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் பற்றாக்குறை, அதனைதொடர்ந்து ஏற்படும் விலை உயர்வால் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதனால் விவசாயிகள் அரசாங்கத்தை பார்த்து நாங்கள் வாழவேண்டுமா? சாகவேண்டுமா எனக் கேட்கின்றனர். அந்த அளவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயி இரவு, பகல் பாராமல் உழைக்கின்றான். ஆன் லைன் வியாபாரம் செய்து பதுக்கல்காரன் பதுக்கிக்கொண்டே இருக்கிறான். அரசாங்கம் விளைபொருட்கள் அதிகம் விளையும் நேரத்தில் அதனை சேமிப்பு குடோன்களில் சேமித்து வைத்து பின் விலை உயர்வு ஏற்படும்போது அதாவது சீசன் இல்லாத சமயத்தில் அதிக விலைக்கு விற்று அதில் ஏற்படும் கூடுதல் வருவாயை விவசாயிக்கு தரவேண்டும்.
மார்க்கெட் கமிட்டியில் பெரும் கொள்ளை நடக்கிறது. விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்வதில்லை. வேண்டு மென்றே காலம் தாழ்த்து கின்றனர். அரசாங்கத்துக்கும் இந்த நிலை தெரியும். ஆனால் கண்டுகொள்வதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை.
இதனால்தான் விவசாயிகள் தங்கள் விலைநிலங்களை விற்றுவருகின்றனர். அவ்வாறு வாங்கும் விளை நிலங்களிலும் விவசாயம் நடைபெறுவதில்லை. இந்த நிலை இப்படியே நீடித்தால் நாம் அரிசிக்கு அண்டை மாநிலங்களை நம்பியிருக்கவேண்டிய அபாய நிலை ஏற்படும். நமது மாநிலத்தில் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்கி அதனை ஒரு வருடத்திற்க்குள் விவசாய பணி செய்யாமல் இருந்தால் அந்த நிலத்தை விற்ற நீங்களே உள்ளே சென்று பயிர் செய்யுங்கள். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் நான் உங்களுக்காக வருகின்றேன்.
சிறு, மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரு 25 ஆயிரம் சம்மந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் அரசாங்கம் பணம்போடவேண்டும். காரணம் அந்த விவசாயி இந்த சூழ்நிலையிலும் விவசாயம் செய்வதை ஊக்கப்படுத்தவே இந்த தொகை ஆகும்.
விவசாயிகள் பாவப்பட்டவர்களாக உள்ளனர். விவசாயிகளுக்காக நாம்போராடும் இந்த நிலையை அனைவரும் உணரவேண்டும். அந்த நிலை வரும். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும் என்றார் அவர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications