தெலுங்கானா விவகாரம்: இன்று டெல்லியில் கிரண் குமார் ஆலோசனை
ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரம் குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனை நடத்த ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி இன்று டெல்லி செல்கிறார்.
தெலுங்கானா பிரச்சனை குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவிருக்கிறது. அதற்கு முன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு கிரண்குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்புவிடுத்தது. இதையடுத்து அவர் இன்று டெல்லி செல்கிறார்.
தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஐக்கிய ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் என குழப்பமான பரிந்துரைகளை கமிட்டி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் கிரண் குமார் ரெட்டி ஆலோசனை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications