பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகை-கருணாநிதியை சந்திப்பாரா
Subscribe to Oneindia Tamil

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை இரவு தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். நாளை இரவு அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார். பிறகு நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்தில் புதிய சுங்கத்துறை அலுவலகம் திறந்து வைப்பார் என்று தெரிகிறது. இதறகாகத் தான் அவர் தமிழகம் வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் இரவே அவர் டெல்லி திரும்புகிறார்.
பிரணாப் முகர்ஜியின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தனது வருகையின்போது அவர் முதல்வர் கருணாநிதியை சந்திப்பாரா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications