கர்நாடக பந்த் எதிரொலி: தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil
ஓசூர்: எடியூரப்பா மீது ஊழல் வழக்கு தொடர ஆளுநர் உத்தரவிட்டதைக் கண்டித்து கர்நாடகத்தில் பந்த அறிவிக்கப்பட்டுள்லதால் பெரும் பதட்டம் நிலவுகிறது. பெங்களூர் மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் நேற்று இரவு அனுமதி அளித்து உத்தரவு இட்டதைத் தொடரந்து அங்கே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அங்கே முதல்வருக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நள்ளிரவு பெங்களூரில் பஸ்களை எரித்தனர். இதனால், பெங்களூரில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications