கொள்முதல் விலை உயர்வில் ஏமாற்றம்-பிப். 7ம் தேதி பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்

சங்க நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்குச் சங்கத் தலைவர் முகம்மது அலி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில், ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.5, எருமைப் பாலுக்கு ரூ.8 உயர்த்தி கேட்ட நிலையில், அரசு முறையே ரூ.1.10 மற்றும் ரூ.2.20 உயர்த்தியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
பால் உற்பத்தியாளர் ஆரம்ப கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குகிற பாலுக்கு அரசு ஒரு லிட்டருக்கு ரூ.3 மானியம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7-ந் தேதி முதல் பால் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே பால் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கில் குதிக்கவுள்ளதால் பாலுக்குத் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications