மாஸ்கோவில் திருடர்கள் தாக்கியதில் இந்தியர் பலி-இன்னொருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த திருடர்கள் தாக்குதலில் ஒரு இந்தியர் படுகொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியர் காயமடைந்தார்.

மாஸ்கோவில் உள்ள ஷ்கோஸ்கோஸ்விகி என்ற இடத்தில் இரு இந்தியர்கள் ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கியுள்ளனர். இந்த வீட்டுக்கு திடீரென 4 திருடர்கள் சிலர் புகுந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், இரு இந்தியர்களையும் கயிற்றால் கட்டினர். பின்னர் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மொத்தம் 500 அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன.

இந்தத் தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து இந்தியரின் உடலை மீட்டனர். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரு இந்தியர்களும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+