வாக்காளர் அடையாளர் அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து தலித் கிறிஸ்தவர் ஆர்ப்பாட்டம்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய தலித் கிறிஸ்தவர்கள் நல இயக்கம், தலித் கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம், தலித் கிறி்ஸ்தவர் விடுதலை வாழ்வுரி்மை இயக்கம் ஆகியவை சார்பில் நேற்று பாளையங்கோட்டையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

போராட்டக் குழுவினர் நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரம் தலித் கிறிஸ்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஜெயராமனிடம் அடையாள அட்டைகளைக் கொடுத்தபோது அவர் அவற்றை பெற்றுக் கொண்டார். அந்த வாக்காளர் அடையாள அட்டைகள் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், "தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர்களில் சேர்க்க வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பிக் கொடுத்துள்ளோம். இதன் பிறகும் எங்களை பட்டியல் இனத்தில் சேர்க்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம்," என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+