கேரளாவில் 2 பெண் குழந்தைகளை எரித்து தானும் எரிந்த தந்தை: போலீசார் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது 2 பெண் குழந்தைகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தன்னைத் தானே ஒருவர் எரித்துக் கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா மேப்பாடி மாவட்டத்தை சேர்ந்தவர் பின்னி. இவரது மனைவி கிரேசி. இவர்களது மகள்கள் அமையா, அமலா, மகன் அபி. கூலித் தொழிலாளியான பென்னி சரியாக வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடித்து விட்டு வந்து மனைவி, குழந்தைகளை கொடுமைப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று மாலையும் பென்னி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். கிரேசி மகன் அபியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது பென்னி திடீரென அமையா, அமலா மற்றும் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றினார். முதலில் தனது உடலில் தீ வைத்துக்கொண்டு பிறகு மகள்களுக்கும் தீ வைத்தார். அவர்களது அலறலைக் கேட்ட அக்கம்பக்ககத்தினர் ஓடி வந்து மீட்க முயன்றனர். ஆனால் பென்னியும், அமையாவும் அங்கேயே உடல் கருகி இறந்தனர்.
உயிருக்கு போராடிய அமலாவை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகி்க்சை பலனின்றி அங்கு அமலா இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications