ரேஷன் கடைகளில் துவரம், உளுத்தம் பருப்பின் விலை ரூ. 10 குறைப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலை கிலோ ரூ. 10 குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விலைவாசி தாக்கத்திலிருந்து ஏழை-எளிய பாமர மக்களைக் காத்திட கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் முதல் மானிய விலையில் துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தை அரசு தொடங்கி செயல்படுத்தி வருகின்றது.
இந்த விலையை மேலும் குறைக்கும் நோக்கத்துடன், ரேஷன் கடைகள் மூலமாக தற்போது விற்கப்படும் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டும் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 40 என்று விற்கப்படுவதில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்று குறைத்தும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதிலிருந்து ரூ.25 ஆக குறைத்தும், பிப்ரவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்ய முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications