தேசியக் கொடியை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை-கத்காரி
டெல்லி: ஜம்முவில் பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமாஐனது. தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் செயல் அரசியல் என்று காங்கிரஸ் வர்ணித்திருப்பது தவறானது, மடத்தனமானது என்று பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளார்.
இன்று டெல்லி பாஜக தலைமையகத்தில் குடியரசு தின கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை கட்சித் தலைவர் கத்காரி ஏற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பாஜக தலைவர்கள் ஜம்முவில் வைத்து கைது செய்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
தேசியக் கொடி ஏற்றுவதை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது தவறானது, மடத்தனமானது. இதில் அரசியல் எங்கே வருகிறது. தேசியக் கொடியை ஏற்றுவது அரசியலா. இது அரசியல் அல்ல, எங்களது கடமை.
பிரிவினைவாதிகளின் நெருக்குதலுக்கு மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் பணிந்து விட்டனர் என்றார் கத்காரி.
சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி விடுதலை
இதற்கிடையே நேற்று கைது செய்யப்பட்ட சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, அனந்தக்குமார் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். கத்துவா என்ற இடத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஜம்முவில் உள்ள பாஜக தலைமையகத்திற்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருமாறு பாஜகவுக்கு முதல்வர் உமர் அப்துல்லா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதை பாஜக நிராகரித்து விட்டது.












Click it and Unblock the Notifications