தொழிலாளர்களுக்கு 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்கிய ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: தனது நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.
தொழிலாளர் பங்கு விருப்பத் திட்டத்தின் கீழ் இந்தப் பங்குகளை ஒதுக்கியுள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்.
கடந்த நவம்பரில் 2.25 லட்சம் பங்குகளை தொழிலாளர்களுக்கு ஒதுக்கிய ரிலையன்ஸ், இந்த ஆண்டு ஜனவரியில் 2.86 லட்சம் பங்குகளை ஒதுக்கியது. மூன்றாவது கட்டமாக இப்போது 1.6 லட்சம் பங்குகளை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ 4008 கோடியை நிகர லாபமாகப் பெற்ற ரிலையன்ஸ், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ரூ 5136 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications