பி. இ.க்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை: கருணாநிதிக்கு கபில் சிபல் தகவல்
சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைத் தேர்வு குறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
மருத்துவ இளநிலை மற்றும் முதுகலை கல்வி சேர்க்கைக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கொண்டு வருவது குறித்து நீங்கள் கடந்த 3-ம் தேதி எழுதிய கடிதம் கிடைத்தது. மருத்துவக் கவுன்சில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் வருவதால், இது குறித்து மேல் நடவடிக்கைக்காக உங்கள் கடிதத்தை அந்தத் துறையின் அமைச்சர் குலாம்நபி ஆசாத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்வது குறித்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டோம். இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு தான் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications