மகாத்மா காந்தி நினைவு தினம்-கருணாநிதி தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி
Subscribe to Oneindia Tamil

காந்தியடிகள் நினைவு தினம் ஜனவரி 30ம் தேதி வருகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் இன்றே அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் காந்தியின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு செயலர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications