யாஹூ-வருவாய் உயர்ந்தாலும் வளர்ச்சி குறைவுதான்!

நிறுவனத்தின் பங்குகள் விலை லேசாக உயர்வு கண்டாலும், வளர்ச்சி என்று பார்க்கும்போது மேலும் பின்னடைவையே யாஹூ கண்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன் யாஹூவின் தலைமைப் பொறுப்புக்கு கரோல் பட்ஸ் வந்த பிறகு, நிலையை சீராக்க எடுத்த முயற்சிகள் பெரிதாக கை கொடுக்கவில்லை. காரணம், வளர்ந்து வரும் சமூக நெட்வொர்க் தளங்கள். குறிப்பாக பேஸ்புக்!
யாஹூவின் பெரிய பலமே அதன் வேலைவாய்ப்பு தளம்தான். ஆனால் இப்போது அந்தத் தளம் இருக்குமிடம் தெரியவில்லை. யாஹூவின் வீழ்ச்சியே இங்கிருந்துதான் ஆரம்பமானது என்கிறார்கள் அந்நிறுவனத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள்.
இதன் பலன், யாஹூவின் வளர்ச்சி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்குகளின் விலையில் 2 சென்ட் உயர்வு இருந்தாலும், மொத்த வருவாய் 1.53 பில்லியனாகக் குறைந்துள்ளது.
அதே நேரம் விளம்பர வருவாய் 1.19 பில்லியன் டாலரிலிருந்து 1.21 டாலராக உயர்ந்துள்ளது யாஹூவுக்கு ஆறுதல் செய்தியாகும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த யாஹூ சி இ ஓ கரோல் பட்ஸ், யாஹூவை பழையபடி நம்பர் ஒன்னாகக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருப்பதாகவும், தனது திட்டங்கள் வரும் நாட்களில் பலன்தரத் தொடங்கும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications