டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசிடமே இருக்கும்-ஜெயபால் ரெட்டி

Subscribe to Oneindia Tamil

Jaipal Reddy
டெல்லி: டீசல் விலை நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடம் அரசு கொடுக்காது. அரசிடமே அந்தப் பொறுப்பு இருக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியாது. அது அரசியல் ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் சாத்தியமில்லை. குறிப்பாக இப்போதைக்கு சாத்தியமில்லை. அது அரசிடமே இருக்கும் என்றார் அவர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதேசமயம், டீசல் விலை உயர்வை மட்டும் தன் வசமே வைத்துக் கொண்டது. இதையடுத்து பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டீசல் விலை உயர்வையும் எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைக்கும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இதை மறுத்துள்ளார் ஜெயபால் ரெட்டி.

நாட்டின் உணவுப் பணவீக்கம் தொடர்ந்து அசவுகரியமாகவே இருந்து வருவதால், டீசல் விலையை உயர்த்தினால் அது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்க வைத்து விடும் என்ற பயத்தால்தான் டீசல் விலை நிர்ணய உரிமையை மத்திய அரசே தொடர்ந்து வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+