சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள்-அரசே கொண்டாடும் என அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனவர் சமுதாய மேதை, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 151வது பிறந்த நாளை தமிழக அரசே கொண்டாடும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மீனவர் சமுதாய மேதை சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் நினைவாக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர்
மாளிகை எனப் பெயர் சூட்டியும், அங்கு அவரது திருவுருவச் சிலையை நிறுவியும், மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டத்திற்கு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் நினைவு இலவச மீனவர் வீட்டு வசதித் திட்டம் எனப் பெயர் சூட்டியும், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி, மரபுரிமையர்க்கு 15 இலட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கியும், பல்வேறு வகையில் சிறப்புகள் செய்துள்ளது இந்த அரசு.

சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 18 ஆம் நாளை அரசு சார்பில் கொண்டாடுவதென்று முடிவெடுத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+