தொகுதிப் பங்கீடு பேச்சு... நாளை டெல்லி செல்கிறார் கருணாநிதி!

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரைச் சந்தித்து காங்கிரஸுடனான தொகுதி உடன்பாடு குறித்துப் பேசுகிறார்.
டெல்லியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளுக்கு மு க ஸ்டாலின் செல்வது வழக்கம். இந்த முறை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச வேண்டியிருப்பதால், தானே டெல்லிக்குச் செல்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படுகிறார்.
முதல்வர்கள் மாநாட்டுக்கு ஒரு நாள் முன்பாகவே டெல்லி செல்வதால், காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து வரும் சட்ட மன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேசுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் வரை ஒதுக்க கருணாநிதி தயாராக உள்ளதாகத் தெரிகிறது. அநேகமாக இந்தப் பயணத்தின் போதே காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் தரப்படும் என்பதையும் இறுதி செய்துவிடுவார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.
இந்தப் பயணத்தின்போது, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் விவகாரம் தொடர்பாகவும் கருணாநிதி பேசத் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு தந்தி மற்றும் கடிதங்களை அனுப்பி வந்த முதல்வர், தேர்தலுக்கு முன் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை தேவை என்பதை நேரில் வலியுறுத்துவார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications