தமிழக மாணவர் காங். தேர்தல்-வாசன் கோஷ்டி படு தோல்வி

ப.சிதம்பரம் கோஷ்டியிடம், மாநில அளவிலான பதவிக்கான தேர்தலில் வாசன் கோஷ்டி தோல்வியைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை பெரிய கோஷ்டி ஜி.கே.வாசன் கோஷ்டிதான். அனைத்து முக்கியப் பதவிகளையும் இந்த கோஷ்டிதான் கைவசம் வைத்துள்ளது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் இந்தக் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜ்தான் தலைவரானார். ப.சிதம்பரம் கோஷ்டியை கடுமையாகப் போராடி தோற்கடித்தார் யுவராஜ்.
இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது.
இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த பிரபுதாஸ் என்பவர் 1520 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவரானார். 2வது இடத்தை ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த 1300 வாக்குகள் பெற்றார். இவரும், பால்பாண்டி, சுகன்யா, சனூப், நவீன்கிருஷ்ணா, சுபாஷ், பேச்சியம்மாள், கோமதி, ஜெயராஜ் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேசியப்பிரதிநிதிகளாக சேகர், யோகேஷ், திராவிட மணி, சூர்யா ஆகியோரும் தேர்வானார்கள்.
மொத்தம் உள்ளிட்ட 32 மாவட்டங்களுக்கான தேர்தலில் சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் 15 மாவட்டத் தலைவர் பதவிகளைப் பிடித்து வாசன் கோஷ்டியினரை அதிர வைத்தனர். வாசன் கோஷ்டிக்கு 9 மாவட்டங்கள்தான் கிடைத்தன.
இதன் மூலம் மாணவர்கள் மத்தியில், ப.சிதம்பரம் தலைமையிலான கோஷ்டிக்கே அதிக ஆதரவு உள்ளது நிரூபணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications