பாரிமுனை சுங்கத்துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு: சான்றிதழ்கள் சரிபார்ப்பு
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் திடீர் என்று சோதனை நடத்தினர்.
சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் சுங்கத்துறை அலுவலகம் உள்ளது. அங்கு பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும், மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிப்பதில் இடைத் தரகர்கள் ஆதிக்கம் இருப்பதாகவும் சிபிஐ-க்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்று அந்த அலுவகத்தில் சிபிஐ திடீர் என்று சோதனை நடத்தியது. அங்கிருந்த சான்றிதழ்களை சரிபார்த்தது. அதன் பிறகே புகார் பொய்யானது என்று தெரிய வந்தது.
இதற்கிடையே இந்த சோதனையில் முறைகேடுகள் செய்த 5 உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருவதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.
இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, நாங்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தியது உண்மை தான். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications