தட்கல் டிக்கெட்டுக்கு புகைப்பட சான்று அவசியம்: 11-ம் தேதி முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தட்கல் முறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க இனி தட்கல் டிக்கெட்டில் பயணிப்பவர்கள் புகைப்பட அடையாளச் சன்றுடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் 11- ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் கீழ் வரும் அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் அசலை பயணத்தின்பபோது காட்ட வேண்டும். அடையாள அட்டையை காட்டத் தவறினால், அவர்கள் டிக்கெட் எடுக்காத பயணிகளாக கருதப்பட்டு அதற்குரிய அபராதம் செலுத்த வேண்டும்.

1. வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. வருமான வரித் துறை வழங்கும் நிரந்தர கணக்கு எண் (பேன் கார்டு)
4. ஓட்டுனர் உரிமம்
5. மத்திய/மாநில அரசுகள் வழங்கும் புகைப்பட அடையாள அட்டை
6. பள்ளி/கல்லூரிகளால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய மாணவர் அடையாள அட்டை
7. புகைப்படத்துடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பாஸ் புக்
8. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கடன் அட்டைகள்

தட்கல் டிக்கெட்டுகளை புரோக்கர்கள் மொத்தமாக வாங்கிவிடுவதால் தேவைப்படும்போது பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதைத் தடுக்கத் தான் இந்த நடவடிக்கை.

அதேசமயம், தட்கல் டிக்கெட் எடுக்கையில் அடையாள அட்டையைக் காட்ட வேண்டியதில்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+