உத்தப்புரம் விவகாரத்தை அரசியலாக்குகிறது சிபிஎம்-ஏ.சி.சண்முகம்
சென்னை: மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் நிலவும் இணக்கமான சூழலைக் கெடுக்கும் வகையில், அதை அரசியலாக்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதை அது தவிர்க்க வேண்டும் என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதுரை உத்தப்புரத்தில் பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இரு பிரிவினரிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டாலும், உடனே இரு சமுதாய பெரியவர்களும் பேசி தீர்த்துக்கொள்வர்.
முத்தாலம்மன் கோவில் பிள்ளைமார்களுக்கு சொந்தமான நிலத்தில் அவர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. இப்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆலயப்பிரவேசம் என்று அறிவித்து பதட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் இப்போராட்டத்தை கைவிட்டு, உத்தப்புரம் மக்கள் அமைதியாக வாழ வழிவிட வேண்டும். இதனை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications