பிப். 3 முதல் +2 செய்முறைத்தேர்வு: நாலரை லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு வரும் 3-ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்வுகளை சுமார் 4.5. லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்கி 25-ம் தேதி நிறைவடைகிறது. இதை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான செயல்முறை தேர்வு மாநிலம் முழுவதும் வரும் 3-ம் தேதி துவங்குகிறது.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் செயல்முறை தேர்வு துவங்கினாலும் முடியும் நாட்கள் மாவட்டம் வாரியாக வேறுபடும். இந்த ஆண்டுக்கான தேர்வுகளை வரும் 3-ம் தேதி துவங்கி 22-ம் தேதிக்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தேர்வுகளி்ல் மொத்தம் நாலரை லட்சம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். சென்னை மாவட்டத்தில் 3-ந் தேதி முதல் 9-ம் தேதி வரை, 10- தேதி முதல் 15-ம் தேதி வரை என 2 கட்டங்களாக செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications