மகள்களுடன் மீண்டும் இந்தியா வர மிஷல் ஆர்வம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலுக்கு மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதாம். ஆனால் இந்த முறை தனது மகள்கள் சாஷா மற்றும் மால்யாவையும் தன்னுடன் அழைத்து வர விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிஷலுடன் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் மிஷலுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலன் ஆகியோருடன் நடந்த சந்திப்பின்போது ஒபாமா இந்த தகவலைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மிஷல் இந்திய பயணத்தை பெரிதும் விரும்பியதாகவும், மீண்டும் ஒரு முறை வர விரும்புவதாகவும், இந்த முறை 2 மகள்களுடன் வர வேண்டும் என்று விரும்புவதாகவும் ஒபாமா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
மிஷல் வந்தபோது அவர்கள் 2 மகள்களும் உடன் வருவதாகத் தான் இருந்தது. ஆனால் அவர்களுக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்காததால் பயணம் ரத்தானது. மிஷல் விரைவில் இந்தியா வருவார் என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமாக எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தானும், மிஷலும் இந்திய பயணத்தை பெரிதும் விரும்பியதாகவும், இந்த வாய்ப்புக்காக தாங்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி கூறியதாக அவரிடம் தெரிவிக்குமாறும் மேனனைக் கேட்டுக் கொண்டார் ஒபாமா.












Click it and Unblock the Notifications