தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்-ஸ்டாலின்

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக, கொங்கு நாடு முன்னேற்ற சங்கம், கொங்கு இளைஞர் பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், முதல்வர் கருணாநிதி செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்து வரும் பெரும் வரவேற்பை தொடர்ந்து ஏராளமானோர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியே மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
திமுகவில் இணைய வேண்டும் என்ற எண்ணம் ஏன் உங்களுக்கு வந்திருக்கிறது, பதவி பெற வேண்டும் என்பதற்காக அல்ல. பதவி பெற வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால், ஆட்சிக்கு வந்த உடனேயே திமுகவில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின் ஐந்து ஆண்டுகாலம் முடியப் போகிறது. இந்த நேரத்தில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
இந்த நேரத்தில் தைரியமாக திமுகவில் இணைந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் திமுக மீண்டும் வெற்றி பெறும், திமுக ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications