தேர்தல்-திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: அருந்ததி மக்கள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவரும், தமிழ்நாடு காலணி, தோல் பொருள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல் நலவாரிய தலைவருமான வலசை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில துணை தலைவர் எம்.பி.கோவிந்தசாமி, பொருளாளர் ஏ.சி.சோமு, மகளிரணி தலைவி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வலசை ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
அருந்ததியருக்கு 3 சதவீதம் தனி உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதியை, 6வது முறையாக முதல்வராக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அருந்ததி மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் அருந்ததி மக்கள் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவேண்டும் என்று முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications